ரயிலில் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!

0 259

ரயில் ஒன்றில் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த உடரட மெனிகே ரயிலில் மோதி குறித்த மூவரும் உயிரிழந்துள்ளனர்.

இன்று (08) முற்பகல் 11.55 மணியளவில் ரொசெல்ல புகையிரத நிலையத்திலிருந்து சற்று தொலைவில் 103 1/2 கிலோ மீற்றர் தூணுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.