திருகோணமலையில் முச்சக்கரவண்டி மோதி முதியவர் பலி…

0 234

திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாற்சந்தியை கடக்க இருந்த இரு சக்கர வாகனத்தின் ஓட்டுனரின் மீது வேகமாக வந்த முச்சக்கர வண்டி மோதியதில் இந்த உயிரிழப்பு நேர்ந்துள்ளது.

உயிரிழந்தவர் திருஞானசம்பந்தர் வீதியை சேர்ந்த வீரசிங்கம் இந்திரராஜ் (வயது 70) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய முச்சக்கரவண்டி ஓட்டுனரான (வயது 56) மகமாயபுரம், மட்கோ பிரதேசவாசி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.