நாட்டை விட்டு தப்பிக்கவுள்ள முன்னாள் அமைச்சர்கள்..

0 259

முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் சிலர் நாட்டை விட்டு வெளியேற தயாராக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன..

இது தொடர்பில் சட்டத்தரணிகள் சிலர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சிக்கி உயர் நீதிமன்றத்தில் குற்றம் வழக்குகள் உள்ள சிலரே இவ்வாறு நாட்டை விட்டு வெளியேற
தயாராகி வருவதாக குறித்த சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதனை தடை செய்வதற்கு உத்தரவிட நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபரிடம் கோரிக்கை சட்டத்தரணிகள் விடுத்துள்ளனர்.

சட்ட மா அதிபர் திணைக்களத்தில் நேற்று இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும் அதற்கு சாதகமான பதில் கிடைத்துள்தாகவும் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.