வெதுப்பக உரிமையாளர்களிடம் அசேல சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்!

0 11

அண்மையில் இலங்கைக்கு இந்தியாவிலிருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டன.

கொழும்பு துறைமுகத்திற்கு வந்த விரைவில் அழுகிப்போகக்கூடிய திரவ முட்டைகள் சுமார் ஏழு நாட்களாக விடுவிக்கப்படாமல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில், அவை பழுதடைந்திருக்கலாம் என்ற அடிப்படையில், எதிர்வரும் புத்தாண்டுக்கு இந்த முட்டைகளை பயன்படுத்தி கேக் தயாரிக்க வேண்டாம் என்று வெதுப்பக உரிமையாளர்களிடம் அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான அசேல சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த இறக்குமதி மூலம் சுங்கம் ஏற்றுமதி – இறக்குமதி சட்டத்தை மீறியுள்ளது.

எனவே பொது சுகாதார ஆய்வாளர்கள் துறைமுகத்திற்குச் சென்று முட்டைகளின் தரத்தை பரிசோதிக்க வேண்டும் என்றும் அசேல சம்பத் கோரியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.