அரச பணியாளர்களின் மேலதிக நேர கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் தொடர்பிலான விசேட சுற்றறிக்கை
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அரச பணியாளர்களுக்கு வழங்கப்படும் மேலதிக நேரம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த முன்னதாக தீர்மானிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், இது எதிர்காலத்தில் வெளியிடப்படும் சுற்றறிக்கையில் இருந்து வேறுபட்டதாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான அரச சேவையாளர்களின் வேதனம், ஓய்வூதிய கொடுப்பனவு மற்றும் மேலதிக கொடுப்பனவுகளுக்காக சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்ட நிதியின் ஒரு தொகையினை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது தெரிவித்தார்.
அரச பணியாளர்களின் மேலதிக நேர கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் தொடர்பிலான விசேட சுற்றறிக்கை எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படவுள்ளது.