நேற்று இரவு வீசிய பலத்த காற்று காரணமாக தமிழக கடற்பரப்பில் கரை ஒதுங்கிய இலங்கை மீனவர்

0 360

நேற்று இரவு மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் தமிழக கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ளார்.

மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது பலத்த காற்று வீசியதால் திசைமாறி தமிழகத்தை சேர்ந்த நாலுவேதபதி கடற்கரை பகுதியை குறித்த மீனவர் சென்றடைந்துள்ளார்.                                                யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 23 வயதுடைய விஜய மூர்த்தி என்பவரே இவ்வாறு திசைமாறி சென்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிலித்தார்.

அத்துடன் குறித்த மீனவரின் படகில் அதிகளவிலான மீன் பிடி வலைகள் காணப்பட்ட்தாகவும் அவர் எமது செய்திச் சேவைக்கு மேலும் தெரிவித்தார்.                                                                                     

Leave A Reply

Your email address will not be published.