மஹர சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி..

0 2,568

மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே பதட்டமான சூழ்நிலை நிலவுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.                                                                                                                இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 2 பேர் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து குழப்ப நிலையை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸ் விசேட அதிரடி படையினர் குழுவொன்று சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.