மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி…

0 685

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பாடசாலைகளுக்கு நாளை டிசெம்பர்
7ஆம் திகதி திங்கட்கிழமையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண
ஆளுநர், திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை தொடர்பாக கல்வி அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின்
பின் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பிரிவு புயல் காரணமாக கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை வடமாகாணம்
முழுவதும் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பாடசாலைகளுக்கு
நாளை திங்கட்கிழமையும் விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.