ஒரேநாளில் 26 தொற்று.. அபாய வலயமாக மாறிய யாழ் மாவட்டம்..

0 47

யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 393 பேருக்கு இன்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளபட்டுள்ளது.

பரிசோதனைகளுக்கு அமைவாக யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் 26 பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் க.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இதற்கமைய கொக்குவில், உரும்பிராய், நவாலி, சங்கானை, பண்டத்தரிப்பு, கைதடி,சண்டிலிப்பாய் மற்றும் காங்கேசன்துறை ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும்

அளவெட்டி,கீரிமலை, மானிப்பாய், உடுவில், இணுவில், சுன்னாகம் பகுதியில் 2 பேரும்.

தெல்லிப்பழை மற்றும் ஏழாலை ஆகிய பகுதிகளில் தலா 3 பேரும் கொரோன தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.