தகாத உறவால் பிறந்த சிசுவை புதைத்த 24 வயது யுவதி – யாழில் சோகம்..

0 151

யாழ், அரியாலை புங்கங்குளம் பகுதியில் பிறந்த சிசு ஒன்று மண்ணுக்குள் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

புங்கங்குளத்த்தை சேர்ந்த 24 வயதுடைய திருமணமாகாத யுவதி ஒருவர் நேற்றயதினம்
(31) குருதிப்போக்கு காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் படி அவருக்கு குழந்தை பிறந்துள்ளமை கண்டறியப்பட்டு சட்ட மருத்துவ அதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டது.

மருத்துவ அறிக்கைக்கு அமைய இன்றய தினம் குறித்த யுவதியின் வீட்டுக்கு சென்ற யாழ். போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ மற்றும் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மற்றும் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது யுவதிக்கு பிறந்த சிசு புதைக்கப்பட்ட நிலையில் அவரின் வீட்டு வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டது.

இந்த நிலையில் சிசு இயற்கையாக உயிரிழந்ததா அல்லது கொலை செய்யப்பட்டதா என்பது குறித்து பரிசோதனையின் பின்னரே உறுதிப்படுத்தப்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.