இந்திய கடலோர காவல் படையிடம் சிக்கிய சுமார் 30 லட்சம் மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள்.

0 79

தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 30 லட்சம் மதிப்பிலான சமையல் மஞ்சள் மூட்டைகள் இந்திய கடலோர காவல் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சமீப காலமாக தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடல் அட்டை,கடல் பல்லி,கஞ்சா, சமையல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் அதிகமாக கடத்தப்பட்டு வருகிறது.

இதனை தடுக்க இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தனுஷ்கோடி கடற்கரை வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக சமையல் மஞ்சள் கடத்த இருப்பதாக மண்டபம் கடலோர காவல்படையினர் கிடைத்த ரகசிய தகவலையடுத்து நேற்று மாலை தனுஷ்கோடி அருகே உள்ள மூன்றாம் தீடையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் 15 மூட்டைகளில் சுமார் 750 கிலோ சமையல் மஞ்சள் இலங்கை கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தது இதனை கண்ட இந்திய கடலோர காவல் படையினரால் மஞ்சள் மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் சமையல் மஞ்சளை கடத்துவதற்காக அந்த பகுதியில் கடத்தல்காரர்கள் யாரேனும் பதுங்கி உள்ளனரா என்பது குறித்து இந்திய காவல்படைக்கு சொந்தமான வாட்டர் ஸ்கூட்டர் மூலம் தீவு முழுவதும் சோதனை நடத்தினர்.

ஆனால் கடத்தல்காரர்கள் இந்திய கடலோர காவல்படை வீரர்கள் வருவதை கண்டு தப்பி ஓடினார்.

இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட சமையல் மஞ்சள் மூட்டைகளை மண்டபத்தில் உள்ள கடற்படை முகாமிற்கு எடுத்து வந்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட சமையல் மஞ்சள்களை இன்று மண்டபம் சுங்க துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட சமையல் மஞ்சளின் இலங்கை மதிப்பு சுமார் 30 லட்ச ரூபாய் இருக்கும் என கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட சமையல் மஞ்சள் குறித்து உளவுத்துறை அதிகாரிகள் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி,அரிச்சல்முனை, மூன்றாம் சத்திரம், வேதாளை, தோப்புக்காடு கிராமங்களில் உள்ள மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.