வவுனியாவில் மேலும் 16 தொற்றாளர்கள்!! எண்ணிக்கை 170 ஆக உயர்வு..

0 426

வவுனியா நகரப்பகுதிகளை சேர்ந்த 16 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டநிலையில்
வவுனியாநகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

அதன் ஒருபகுதி முடிவுகள் இன்று காலை வெளியாகியது.

அதனடிப்படையில் வவுனியா நகர வியாபாரநிலையங்களில் பணிபுரியும்13 பேருக்கும் ஆடைத்தொழிற்சாலையை சேரந்த 3 பேருக்கும் தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டது.

குறித்த எண்ணிக்கையுடன் வவுனியா நகர்பகுதியில் கடந்த ஒருவாரத்தில் மாத்திரம் 170தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை வவுனியா நகரப்பகுதிகளை சேர்ந்த மேலும் 500 பேரின் பிசிஆர் முடிவுகள் கிடைக்கப்பெற்ற பின்னர் நகரின் முடக்கம் தளரத்தப்படும் என பிராந்திய சுகாதாரசேவைகள் பிரதி பணிப்பாளர் மகேந்திரன் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.