ஒரே பாடசாலையை சேர்ந்த 15 தமிழ் மாணவர்களுக்கு கொரோனா.

0 57

நாவலபிட்டிய – வேஸ்ஹோல்ட் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 15 மாணவர்களுக்கு கொவிட் தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.

குறித்த பாடசாலையின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த 2ம் திகதி பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவு நேற்றிரவு வெளியாகியுள்ளது.

கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அறிக்கையிலேயே மாணவர்களுக்கு தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், பாடசாலைஆசிரியர் ஒருவருக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.