பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணியின் எதிரொலி – சுமந்திரனுக்கு நடந்தது?

0 63

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட விசேட அதிரடிப்படையினர் மீளப்பெறப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு கிடைத்த திடீர் பணிப்பில் சிறப்பு அதிரடிப் படைப் பாதுகாப்பு மீளப்பெறப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எனினும் தமக்கான விசேட பாதுகாப்பு இவ்வாறு திடீரென மீளப்பெறப்பட்டமைக்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சிறப்பு அதிரடிப் படையினரை வைத்து பேரணியில் பங்கேற்றமை உள்ளிட்ட சில நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்க்கே இவ்வாறு மீளப்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனினும், பிரமுகர் பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு பாதுகாப்புக் கடமையில் தொடர்ந்தும் செயற்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.