வடக்கை சீனாவுக்கு விற்பதில் மாற்றம் இல்லை – அரசு அதிரடி அறிவிப்பு.

0 275

வடக்கில் உள்ள 3 தீவுகளை சீனாவுக்கு வழங்கும் திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர்.

வடக்கில் உள்ள மூன்று தீவுகளை விலைமனு கோரலின் அடிப்படையில் சீன நிறுவனத்திற்கு அதனை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அந்த அமைச்சரவை தீர்மானத்தை தாமதப்படுத்துவதாகவோ அல்லது இரத்துச் செய்வதாகவோ மின்சக்தி அமைச்சர் அமைச்சரவைக்கு இதுவரை அறிவிக்கவில்லை.

இதனால் அந்த தீர்மானம் தொடர்ந்தும் வலுவில் உள்ளது என்பதாகவே தாம் கருதுவதாக உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.