மீண்டும் படையினரின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இரணை தீவு மக்கள்…

0 112

கொரோனா தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணை தீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்பு தெரிவித்து இரணை மாதா நகர் பகுதியில் நேற்று போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

எனினும் அதனை கருத்தில் கொள்ளாது தொடர்சியாக இரணை தீவு பகுதியில் உடல்களை புதைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக இன்றய தினமும் இரணை தீவு பகுதியில் இரண்டு இடங்களின் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்

இதன்படி இரணை தீவு பிரதான இறங்கு துறை மற்றும் உடல்களை அடக்கம் செய்வதற்கு குழிகள் தோண்டப்பட்ட இடம் ஆகியவற்றில் மக்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்

இதேவேளை நேற்றைய தினம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் மீன்பிடி நீர்வள அபிவிருத்தி அமைச்சர் உட்பட பல தரப்பினர்க்கு இரணை தீவு மக்களால் நேரடியாக சென்று எதிர்ப்பு மகஜர் வழங்கி வைக்கப்பட்டது.

எனினும் இதுவரை சடலங்களை அடக்கம் செய்வதற்கான மாற்று இடம் தெரிவு செய்யப்படவில்லை

அத்துடன் சடலங்களை அடக்கம் செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளும் இதுவரையில் நிறுத்தப்படவில்லை.

இந்த நிலையிலேயே மக்கள் இன்றைய தினம் மீண்டும் மேற்படி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்

இதேவேளை இரணை தீவு பகுதிக்கு செல்லும் மக்களிடன் கடற்படையினர் அச்சுறுத்தும் விதமாக செயற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தீவு பகுதியில் வசிக்கும் மக்கள் அங்கு செல்வதற்கு முன் அடையாள அட்டைகளை கடற்படையினரிடம் ஒப்படைத்து செல்ல வேண்டும் என பணிக்கப்படுவதாகவும் பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.