சீன அமைச்சரின் விஜயம் – மோடிக்கு நன்றி தெரிவித்த கோட்டாபய!

0 295

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு உத்தியோக பூர்வ கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இந்த கடிதம் நேற்றைய தினம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தின் மூலம்; இந்தியா இலங்கைக்கு வழங்கிய கொவிட் தடுப்பூசிகளுக்கு கோட்டாபய தனத நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தியா தற்போது பாரிய கொரோனா நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளது.

இந்த நெருக்கடியில் இருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற பிரதமர் மோடிக்கு பலம் இருப்பவதாக தாம் நம்புவதாகவும் கோட்டாபய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் பெங் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில் இந்திய பிரதமர் மோடிக்கு இலங்கை ஜனாதிபதி இவ்வாறு கடிதம் இனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.