லங்கா வைத்தியசாலையில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் திருகோணமலை இளைஞர் கைது

0 105

கொழும்பு நாரஹேன்பிட்டி லங்கா வைத்தியசாலையிலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் குற்றவியல் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் திருகோணமலை உப்புவெளி பகுதியை சேர்ந்த இளைஞரொருவரென பொலிஸார் தெரவித்துள்ளனர்.

லங்கா வைத்தியசாலையில் முதலாம் மாடியிலுள்ள கழிப்பறையொன்றிலிருந்து நேற்றையதினம் குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டிருந்தது.

மீட்கப்பட்ட கைக்குண்டு இராணுவத்தின் குண்டு செயலிழக்கச்செய்யும் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.