தாமதிக்காமல் நீர்க்கட்டணத்தை செலுத்துமாறு அறிவிப்பு

0 158

தாமதிக்காமல் நீர்க்கட்டணத்தை செலுத்துமாறு நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பாவiனையாளர்கள் நீர்க்கட்டணத்தை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா பரவல் நிலை காரணமாக நாளாந்தம் பாவிக்கப்படும் நீரின் அளவும் அதிகரித்துள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இந்த கட்டணங்களை செலுத்துவதற்கான கைப்பேசி செயலி மற்றும் ஒன்லைன் முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் நிதி நிறுவனங்கள் மற்றும் நீர் வழங்கல் சபையில் இந்த கட்டணத்தை செலுத்துவதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.