குழந்தையை பிரசவித்த தாய் கொவிட் தொற்றால் மரணம்

0 168

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்த தாய் ஒருவர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 42 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிரசவத்திற்கு முன்னர் குறித்த பெண்ணுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.

எனினும் குழந்தை பிரசவத்தின் பின்னர் குறித்த பெண்ணுக்கு நோயின் தாக்கம் அதிகரித்தமையால் அவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, அப்பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

Leave A Reply

Your email address will not be published.