இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இந்தியாவிற்கு விஜயம்

0 220

பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர் விஷேட அழைப்பின் பேரில் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கிராமிய அபிவிருத்திஇ மற்றும் விவசாயம், கைத்தொழில் சார் முதலீடு மற்றும் கால்நடை துறைசார் மேம்பாடு தொடர்பான விசேட கலந்துரையாடலை மேற்கொள்வதற்காக இவ் விஜயத்தினை மேற்கொண்டுள்ளனர்.

குழுவினர் மேலும் பல அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான விஷேட சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் மற்றும் இந்திய அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகளுடன் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இந்திய இலங்கை அபிவிருத்தி ஒத்துழைப்பு பங்குடமை குறித்த நோக்குகள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளார்.

சமீபத்தில் கொழும்புக்கு வருகை தந்திருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனுடன் சந்தித்தார்.

அப்போது இடம்பெற்ற . கலந்துரையாடலின்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கிழக்கு மாகாண பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடினார்.

கடந்த 2016ஆம் ஆண்டில் பூர்த்திசெய்யப்பட்ட 45000 வீடுகளை கொண்ட இந்திய வீடமைப்பு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் கிழக்கு மாகாணத்திலும் கணிசமான எண்ணிக்கையிலான வீடுகள் வழங்கப்பட்டிருந்ன.. மேல் மற்றும் தென் மாகாணங்களில் ஆரம்பிக்கப்படிருந்த அவசர அம்புலன்ஸ் சேவையானது 2018ஆம் ஆண்டின் பின்னர் கிழக்கு மாகாணம் உட்பட ஏனைய மாகாணங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டிருந்தது.

கிழக்கு மாகாணத்தில் உள்ளக இடம்பெயர்வுக்குள்ளான மீனவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியில் மீன்பிடிப்பதற்கான சிறுபடகுகள், குளிரூட்டப்பட்ட அறைகள் மற்றும் குளிர்சாதன வசதியுடனான வாகனங்கள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டிருந்தன..

இதற்கு மேலதிகமாக இதுவரையில் செயற்பாட்டில் இருக்கும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு இடையிலான ரயில் பஸ் சேவைக்குரிய ஐந்து அலகுகள் இந்தியாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.மேலும் மத்திய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தூரப் பிரதேசங்களையும் மலைப்பாங்கான பகுதிகளையும் நெடுஞ்சாலைகளுடன் இணைப்பதற்காக 150 மில்லியன் ரூபா பெறுமதியில் 85 பஸ்கள் ஏனைய மாகாணங்களுடன் கிழக்கு மாகாண சபைக்கும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.