பால்மாவுக்கு 6 யோகட்டுகள் – வற்புறுத்திய வர்த்தகர் கைது

0 256

பால்மா கொள்வனவு செய்யும் போது ஆறு யோகட்டுக் வாங்குவது அவசியமானது என கட்டாயப்படுத்திய வர்த்தகர் ஒருவர் நுகவோர் விவகார சபை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தியத்தலாவை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை மாவட்ட நுகர்வோர் அதிகார சபைக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த வர்த்தகர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.