பொலிஸ் நிலையத்திற்கு வந்த அழைப்பு… விரைந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

0 228

யாழ்ப்பாணம், கொடிகாமம், குடமியன் பகுதியில் உள்ளூர் தயாரிப்பு வெடிகுண்டுகள் இரண்டு இன்று (16) மாலை மீட்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாழடைந்த காணி ஒன்றிற்கு அருகில் அமைந்துள்ள குளத்துடன் உள்ள பற்றைக் காட்டில் இருந்து குறித்த வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொதுமகன் ஒருவன் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

15 கிலோ கிராம் மற்றும் 10 கிலோ கிராம் நிறையைக் கொண்ட வெடி குண்டுகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.