ஒன்லைன் கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பொலிஸாரின் அறிவித்தல்

0 220

ஒன்லைன் முறைமையில் பாடசாலை மாணவர்களுக்கு கற்பித்தலை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு, எவரேனும் ஒருவரால் ஏதாவதொரு வகையில், குறித்த கற்பித்தல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அச்சுறுத்தல் விடுக்கப்படுமாயின் அதுதொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நேரடியாக முறைப்பாடு செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.

அல்லாறே, குறித்த ஆசிரியர்கள் அவசியம் ஏற்படின் 119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கும் இதுதொடர்பில் அறிவிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பில் தாமதிக்காமல் சரியான முறையில் மிகவும் கடுமையான சட்டநடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அறிவுறுத்தல் வங்கியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.