நாட்டை திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகள் தயார்! இராணுவ தளபதி அறிவிப்பு

0 224

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி நாட்டை திறப்பதற்கான அனைத்து திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கோரிக்கைக்கமைய அந்தந்த துறைகளுக்காக திட்டங்களை குறித்த நிறுவனங்களினால் இதுவரையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி அதிகாலை 4 மணிக்கு நாட்டை திறப்பதற்கு தேவையான நடைமுறைகளே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றதென இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

சுகாதார பரிந்துரைகள் அதற்கமைய திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டை திறந்த பின்னர் மக்கள் செயற்பட வேண்டிய முறை தொடர்பிலும் அனைத்தும் வழிக்காட்டல்களும் தயாரிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.