என்னடா நடக்குது நாட்டுல!

0 819

இலங்கையின் சொல்லிசை கலைஞரான mc ra வின் இயக்கத்தில், ramith.r இன் இசையிலும் என்னடா நடக்குது நாட்டுல பாடல் கடந்த வாரம் வெளியாகியுள்ளது,

தற்போதைய காலகட்டத்தில் அரசியல் மற்றும் பொருளாதார மேலும் மக்களின் வாழ்வாதார சமூக குழப்பங்களை முன்னிறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடலில் இலங்கையின் தற்போதைய நிலையை அப்பட்டமாக எடுத்துக் கூறியுள்ளார்கள்
இரண்டு நிமிடத்திற்கும் குறைவாக அமைந்திருக்கும் இந்தப் பாடலில் பல உண்மையான கருத்துக்களை முன்னிறுத்தி இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்

மேலும் இந்த பாடலில் மூன்றுக்கும் மேற்பட்ட வேடங்களில் தன்னுடைய நடிப்பின் ஆற்றலை நடிகர் Brindanath அவர்கள் வெளிப்படுத்தி இருக்கிறார் மேலும் சாமியார் வேடத்தில் mc ra வும் அரசியல்வாதியாக செல்வமணி ஸ்ரீதரன் அவர்களும் பாடலுக்கு மேலும் அழகு சேர்த்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும், மேலும் பல துணை நடிகரை உள்ளடக்கியதாக வெளியாகியிருக்கும் இந்தப் பாடல் மக்களிடையே தற்போது பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது என்பதுடன் சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்படும் கருப்பொருளாகவும் மாறியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

இதற்கான அனுசரணை தினேஷ் மற்றும் white pen production நிறுவனத்தினர் வழங்கி இருக்கின்றார்கள்,

Tik-tok வலைத்தளத்தில் பாவனையாளர்களும் என்னடா நடக்குது நாட்டுல பாடலை தற்போது trending செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பது இந்த பாடலுக்கு மக்களிடையே இருக்கும் ஆதரவினை எடுத்த காட்டுவதாக அமைகின்றது,

இலங்கையிலிருந்து mc ra கடந்த வருடம் 25 கலைஞர்களை ஒன்றிணைத்து ஒரே பாடலாக எச்சரிக்கை the world biggest tamil rap cypher , என்ற பாடலின் மூலமாக பல சமூக கருத்துக்களை உள்ளடக்கி வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அதே போல் mc raவின் உருவாக்கத்தில் சமூக நிதர்சனங்களை உள்ளடக்கியதாக இந்த பாடல் தற்போது வெளியாகி உள்ளது

சமூகம் சார்ந்த, சமூகத்திற்கு தேவையான பல கருத்துக்களை உள்ளடக்கியதாக தனது படைப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் கலைஞன் mc ra விற்கும் பாடல் குடும்பத்திற்கும் வாழ்த்துக்கள்.

Leave A Reply

Your email address will not be published.