யாழில் 14 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு

0 120

யாழ். அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தென்மூலை பகுதியில் 14 வயதுச்சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.

குறித்த சிறுமி மதுபானம் கொடுக்கப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் இந்த துஸ்பிரயோக சம்பவம் குறித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள அச்சுவேலி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.