தகாத உறவால் பச்சிளம் குழந்தையை குப்பையில் வீசிய தாய்

0 277

பெற்ற குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிய தாய் ஒருவரை கத்தார் போலீசார் கைதுசெய்துள்ளனர்..

கத்தாரில் உள்ள ஹமத் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம் 2ம் திகதி விமான நிலையத்தின் லாஞ்ச் சேவைப் பகுதியிலிருந்து ஒரு பெண் பச்சிளம் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்போது சிட்னிக்குச் செல்ல கத்தார் ஏர்வேஸில் தயாராகிக் கொண்டு இருந்த பல பெண்கள் வலுக்கட்டாயமாக கீழே இறக்கப்பட்டு ஆம்புலன்ஸுக்கு அழைத்து வரப்பட்டனர்.

அவர்களின் உள்ளாடைகளை கழற்றச் சொல்லி, அவர்கள் சமீபத்தில் குழந்தை பெற்றுள்ளனரா என்று சோதனை செய்யப்பட்டது.

ஏன் இப்படிச் செய்கிறார்கள் என பெண்களுக்கு அதிகாரிகள் தரப்பில் இருந்து எந்த விவரங்களும் சொல்லப்படவில்லை.

ஏன் சோதனைக்கு உள்படுத்தப்படுகிறோம் என்பதற்கான காரணத்தைத் தெரிந்து கொண்டு அதற்கு சம்மதத்தை வழங்க அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என அந்த பெண்கள் குற்றம் சாட்டினார்.

ஆனால் அந்தக் குழந்தையின் தாய் அதிகாரிகளிடம் சிக்கியிருக்கவில்லை.

இந்த நிலையில் ஆசிய நாட்டைச் சேர்ந்த குழந்தையின் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இருவருக்கும் இடையில் தவறான உடல் ரீதியிலான உறவு முறை இருந்து இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..

தற்போது குழந்தையை கத்தார் அதிகாரிகள் கவனித்து வருவதாகவும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.