40 கொரோனா நோயாளர்கள் கிளிநொச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

0 483

வடக்கின் மருதங்கேணி மற்றும் முள்ளியவளை ஆகிய கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் கிளிநொச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட தொற்று நோயியல் மருத்துவமனைக்கே இன்று ஞாயிற்றுக் கிழமை மாற்றம் செய்யப்பட்டனர்.

இதன்படி யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 30 பேர் கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தில் அமைக்கப்பட்ட தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன் முல்லைத்தீவு – முள்ளியவளை கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த 10 பேரும் குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.