இலங்கை உள்நாட்டு போர்: அதிரடிப்படைக்கு பயிற்சி கொடுத்த பிரிட்டிஷ் கூலிப்படையிடம் விசாரணை

0 212

இலங்கை உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட பிரிட்டிஷ் கூலிப்படையினர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பான குற்றச்சாட்டுகளை லண்டன் பெருநகர காவல்துறையினர் (Metropolitan Police) விசாரிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.                                                                                                                               

1980களில் தமிழ் பிரிவினைவாதிகளை எதிர்த்துப் போராடுவதற்கு, இலங்கை காவல்துறையினரில் ஒரு பிரிவினருக்கு பயிற்சி கொடுத்தது தனியார் பாதுகாப்பு நிறுவனமான கீனி மீனி சர்வீசஸ் (Keenie Meenie Services – KMS). இவர்கள் இலங்கை காவல்துறையின் அதிரடிப்படையினருக்கு (Special Task Force) பயிற்சி கொடுத்துள்ளனர்.

இந்த அதிரடிப்படையினர், இலங்கை போரின்போது நடந்த பல மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார்கள். இதில், தமிழ் மக்களை விசாரணையே இல்லாமல் கொலை செய்த குற்றங்களும் அடக்கம்.

பிரிட்டனில் போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரிக்கும் பொறுப்பு, மெட்ரோபோலிட்டன் காவல்துறையின் அதிகாரத்துக்கு உட்பட்ட விஷயமாகும்.

அந்த வகையில், ஒரு பிரிட்டன் அமைப்பு முதல் முறையாக பிரிட்டனைச் சேர்ந்த கூலிப் படையினரின் அயல்நாட்டுச் செயல்பாடு தொடர்பாக தற்போது விசாரணை நடத்துவது இதுவே முதல் முறை என நம்பப்படுகிறது.

இலங்கை உள்நாட்டுப் போரின்போது, பிரிட்டனைச் சேர்ந்த கூலிப்படையினர் போர் குற்றங்களைச் செய்ததாக கடந்த மார்ச் மாதம் மெட்ரோபோலிட்டன் காவல்துறைக்கு சில தகவல்கள் கிடைத்தன. அதைமதிப்பிட்ட பின், விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது என்கிறார் அந்த காவல்துறையின் செய்தித்தொடர்பாளர்.

பிரிட்டன் அரசு இத்தனை காலமும் ரகசியமாக வைத்திருந்த ஆவணங்களை (Classified Files), சமீபத்தில் ரகசியமற்ற ஆவணங்களாக (Declassified Files) வகைப்படுத்தியது. அதே போல பத்திரிகையாளர் ஃபில் மில்லர் தகவல் சுதந்திரத்தின் கீழ் சேகரித்த பல தரவுகளைத் தொகுத்து, Keenie Meenie: The British Mercenaries Who Got Away With War Crimes என்ற புத்தகத்தை எழுதி கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டார்.

இவைதான் பிரிட்டிஷ் கே.எம்.எஸ் தனியார் கூலிப் படையினர், இலங்கை உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு இருக்கின்றனர் என்பதற்கான ஆதாரங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளன.

லண்டன் காவல்துறையின் இந்த விசாரணையை, பிரிட்டனில் வாழும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் சமூகத்தினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்,” என்கிறார் ஃபில் மில்லர்.

அந்த சமூகத்தினர் பலரும், இலங்கையில் உள்நாட்டுப்போர் நடந்து கொண்டிருந்த காலங்களில் அந்நாட்டில் இருந்து வெளியேறி பிரிட்டனில் தஞ்சம் அடைந்தவர்கள்.

“1980களில் கே.எம்.எஸ் படையினர் இலங்கையில் இருந்த நேரத்தில், பல தமிழ் மக்கள் பிரிட்டனில் அகதிகளாக வந்தனர்,” என்கிறார் ஃபில் மில்லர்.

அந்த காலங்களில் ஹெலிகாப்டர்களில் பொருத்தப்பட்டிருந்த தானியங்கி துப்பாக்கிகளால் மக்கள் சுடப்பட்டதை பார்த்ததை இப்போதும் சிலர் நினைவுகூர்கிறார்கள். அத்தகைய தாக்குதல்களின்போது, அந்த ஹெலிகாப்டர்களை

இயக்கியது பிரிட்டனைச் சேர்ந்த கூலிப் படையினர்தான் என்பது தெரியவரும் போது இந்த தகவல்கள் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கின்றன என்கிறார் மில்லர்

Leave A Reply

Your email address will not be published.