ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை வழக்கு ஜனவரி மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு…

0 573

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான
ஜோசப்பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 11ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்
பரராஜசிங்கம் கடந்த 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ம் திகதி மட்டக்களப்பு புனித
மரியாள் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர்
சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட ஆறு பேர் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015 ஆண்டு கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

ஐந்து பேரும் தொடர்ந்து விளக்கமறிலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் 2015ஆம் ஆண்டு
தாங்கள் கைதுசெய்யப்பட்டு குற்ற ஒப்புதல் வாக்குமூலம்பெறப்பட்ட 1ஆம் 02ஆம்
எதிரிகளின் வாக்குமூலமானது சுயேட்சையாக வழங்கப்படவில்லை.

மாறாக தூண்டுதல் அல்லது அச்சுறுத்தல் காரணமாக அந்த வாக்குமூலத்தினை வழங்கியிருந்தார்கள் எனவும் பயங்கரவாத தடுப்புப்பிரிவினரால் நேரடியாக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு வாக்குமூலம் வழங்கியிருந்ததாகவும் தெரிவித்து மேன்முறையீடு செய்யப்பட்டது.

மீளாய்வு மனுவின் பிரகாரம் குறித்த ஒப்புதல் வாக்குமூலத்தினை மேன்முறையீட்டு
நீதிமன்றம் நிராகரித்தன் அடிப்படையில் சந்தேக நபர்களுக்கு 24ஆம் திகதி மட்டக்களப்பு
மேல்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரின் ஒப்புதலின்பேரில் பிணை வழங்கப்பட்டுள்ளது.                   

இந்த நிலையில் இன்று குறித்த வழக்கு தொடர்பான இறுதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என்ற
எதிர்பார்ப்பில் இன்று வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பயங்கரவாத தடுப்பு பிரிவினர் உரிய ஆவனங்களை கொண்டுவராததன் காரணமாக அரச தரப்பு சட்டத்தரனி விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் வழக்கு எதிர்வரும் ஜனவரி 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்..                                                                                                             

Leave A Reply

Your email address will not be published.