தனது நகைச்சுவை பேச்சால் அமைச்சர் டக்ளஸை தெறிக்க விட்ட சாணக்கியன்

0 58

நீங்கள் நடிகர் ரஜினிகாந்தை போன்றவர் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து சாணக்கியன் இன்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியிருந்தார்.

15000 மீனவர்களுக்கு நலன்களை வழங்குவதற்கு அமைச்சு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதா என அவர், அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா “நான் சொல்வதை செய்வேன், செய்வதையே சொல்வேன். தீரா பிரச்சினைகளாக வைத்திருக்க நான் எதைனயும் அணுகுவதில்லை மேலதிகமாக நிதியைப் பெற்று மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்” என பதிலளித்திருந்தார்.

இதனை அடுத்து “நீங்கள் மிக அழகாக ரஜனி காந்தைப் போன்று சொல்வதைச் செய்வேன், செய்வதைச் சொல்வேன் என கூறுகின்றீர்கள் நன்றி, அவ்வாறு நடந்தால் சந்தோசம்” என சாணக்கியன் பதிலளித்திருந்தார்.

இன்றய நாடாளுமன்ற அமைவின்போது இந்த நகைச்சுவையானகேள்வி பதில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.