பெரும் ஆபத்து – பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை..

0 580

முறையான சுகாதாரப் பாதுகாப்புத் திட்டங்கள் இன்றி நாட்டை சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறப்பது ஆபத்தானது என பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டை சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறப்பது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் எம். பாலசூரிய இதனைக் தெரிவிதித்தர்.

விமான நிலையத்தை மீண்டும் திறப்பதற்கு முன்னர் பல்வேறு சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

நாட்டுக்கு வெளிநாட்டுப் பயணிகள் வரும்போது, அவர்களுக்கு இலங்கையின் தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்பான அறிமுகமொன்று வழங்கப்பட வேண்டும்.

அத்தோடு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அன்டிஜன் பரிசோதனையொன்றை மேற்கொண்டு, பரிசோதனை முடிவுகளுடனேயே இலங்கைக்கு வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை நாட்டில் ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்படும் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர்.பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டிய தேவை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.