வவுனியாவின் பல பகுதிகளுக்கு 7 நாட்கள் தொடர் மின்வெட்டு.. இலங்கை மின்சாரசபை அறிவிப்பு.

0 2,188

எதிர்வரும் தினங்களில் வவுனியாவில் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய இம்மாதம் 10, 14, 15, 16, 17, 18, 19 ஆம் திகதிகளில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும் அத்தியாவசிய பராமரிப்பு வேலைகளுக்காக இந்த துண்டிப்பு மேற்கொள்ளப்படுவதாகவும். இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி 10ம் திகதி சூடுவெந்தபுலவு கிராமத்திலும்

14ம், 15ம் திகதிகளில் புதிய சின்னக்குளம் மற்றும் அரசடிக்குளம் பகுதியிலும்

16ம் திகதி கோவிற்குளம் 10வது ஒழுங்கையிலிருந்து சிதம்பரபுரம் வரையிலான பகுதிகளும்

17ம் திகதி வவுனியா அரசடிக்குளம் பகுதியிலும்

18ம் திகதி வன்னி இரானு படை முகாம் , வன்னி விமானப்படை முகாம் மற்றும் விமானப்படை றேடார் பகுதியிலும்

19ம் திகதி கோவிற்குளம் 10ம் ஒழுங்கையிலிருந்து சிதம்பரபுரம் வரையிலும் , மகாகச்சக்கொடிய கிராமம் ஆகிய பிரதேசங்களிலும் மின் தடை அமுல் படுத்தப்பட்டவுள்ளது.

எனவே பொதுமக்கள் மின்தடைக்கான முன் ஆயத்த நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறும் இலங்கை மின்சாரசபை கோரிக்கைவிடுத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.