மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு…

0 34

நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பானது பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த சந்திப்பின்போது பழைய முறையிலோ அல்லது புதிய முறையிலோ மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு பிரதமர் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பிரதமருக்கும், ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பில் மாகாண சபைத் தேர்தல்கள் பற்றிய விபரங்கள் ஆராயப்பட்டதுடன் தேர்தலை நடத்துவதற்கான சட்ட ஏற்படுகளை துரிதப்படுத்தப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

இதன்படி எதிர்வரும் 2021 ஆண்டு ஏப்ரல் மாத்திற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.