வவுனியாவில் மூன்று மாதங்கள் கழித்து பாடசாலைக்கு சென்ற மாணவிக்கு தொற்று!!

0 40

வவுனியா கற்குழியை சேர்ந்த மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் நகர பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த மாணவி வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் கல்விகற்று வருகின்றார்.இவர் வேறு நோய் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் அவருக்கு எழுமாறாக பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. குறித்த மாணவி கடந்த மூன்று மாதங்களாக பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை என பாடசாலை நிர்வாகம் தெரிவிக்கின்றது. எனினும் நேற்று முன்தினம் (14) பாடசாலைக்கு அவர் சென்று கல்விசெயற்பாடுகளில் பங்கெடுத்துள்ளார்.

இதன்போது இரண்டு வகுப்புகளை சேர்ந்த 35 மாணவர்களை ஒன்றாக இணைத்து நேற்றயதினம் பாடம் எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் குறித்த மாணவிக்கு 12 ஆசிரியர்கள் கற்பித்துள்ளனர். ஆசிரியர்கள் அனைவரும் சுஜ தனிமையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய விடயங்கள் தொடர்பாக சுகாதார பிரிவினர் ஆராய்ந்து வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.