இலங்கை முஸ்லிம்களை தமது நாட்டுக்கு அழைக்க மாலைதீவு அரசு தீர்மானம்…

0 51

இலங்கையில் உள்ள முஸ்லிம்களை மாலைதீவிற்கு வருமாறு அரசாங்கம் அழைப்பு விடுக்கவேண்டுமென மாநில முன்னாள் முதலமைச்சர் தன்யா மமூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுவரை காலமும் இலங்கை முஸ்லிம்களை மாலைதீவிற்கு வருமாறு தமது நாட்டு அரசு அழைப்பு விடுக்காதமை தம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ளதாகவும் அவர் குய்ப்ப்பிட்டுள்ளார்.

தொடந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

இலங்கை முஸ்லிம்களை அங்கிருந்து வெளியேறி மாலைதீவிற்கு வருமாறு மாலைதீவு அரசு வேண்டுகோள் விடுக்கவேண்டும்.

எங்கள் அரசாங்கம் இதனை செய்யாதது குறித்து நான் ஆச்சரியமடைந்துள்ளேன்.

உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது முஸ்லிம்களின் மத நம்பிக்கை.

எனவே கொரோனா தொற்றினால் உயிரிழந்த சிறுபான்மை முஸ்லிம்களுக்கு தமது நம்பிக்கையின் அடிப்படையில் இறுதி சடங்கினை நடத்துவதற்கு அனுமதி அளித்து அவர்களின் உரிமைகளை இலங்கை அரசு மதிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.