கட்சி பேதமின்றி பணியாற்றுவேன்!! புதிய தவிசாளர்

0 41

கிடைத்தி்ருக்கும் வாய்ப்பை சரிவரப்பயன்படுத்தி கட்சி பேதமின்ற பணியாற்றுவேன் என்று செட்டிகுளம் பிரதேச சபையின் புதிய தவிசாளர் சுப்பையா ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.

தவிசாளராக தனது கடமைகளை இன்றையதினம் பொறுப்பேற்றுவிட்டு ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….

தவிசாளராக என்னை தெரிவுசெய்வதற்கு ஆதரவாக வாக்களித்த எனது கட்சியின் உறுப்பினர்கள், மற்றும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களிற்கும், மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.

கிடைத்திருக்கும் இந்த பதவி மூலம் கட்சிபேதமின்றி, செட்டிகுளம் பிரதேசத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிற்கும் சமச்சீரான முறையில் சேவையாற்றுவேன்.

மக்களின் கருத்துக்களிற்கு,மதிப்பளித்து முன்னுரிமை அளிப்பேன்.

மீதம் இருக்கின்ற குறுகிய காலப்பகுதிக்குள் சபையின் சட்டத்திற்கு உட்பட்டு மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகளை நீதியான முறையில் செய்வதற்கு முயற்சிகளை எடுப்பேன் என்று தெரிவித்தார்.

இதேவேளை சபையை நல்லமுறையில் நடாத்திச்செல்வதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்த்து நிற்பதாக மேலும் தெரிவித்தார்

Leave A Reply

Your email address will not be published.