வவுனியா திருநாவற்குளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

0 45

கடந்த சில நாட்களுக்கு முன் திருநாவற்குளத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு
தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதனை அடுத்து அவருடைய மனைவி, பிள்ளைகள் மற்றும் அவரது வீட்டில் தங்கியிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கடந்த 15ம் திகதி பிசி.ஆர் பரிசோதனைக்காக மாதிரிகள் பெறப்பட்டது.

இந்த நிலையில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 4 பேருக்கு தொற்று ஏற்ப்பட்டுள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய வவுனியாவில் இதுவரை 31 பேருக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் வவுனியாவில் பல இடங்களிலும் பி சி. ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதேவேளை திருநாவற்குளம் பிரதேசம் முடக்கப்படும் நிலையேற்பட வாய்ப்புள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.