இந்தியாவுடனான பேச்சுவார்த்தை விரைவில் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு என்கிறார் கடற்றொழில் அமைச்சர்

0 40

இலங்கை மற்றும் இந்திய அரசுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்

வடக்கு கடல் பகுதிகளில் இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்கும் முகமாக எதிர்வரும் 30 ஆம் திகதி இந்த இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதற்குரிய முன்னேற்பாடாக வட மாகாணத்தில் உள்ள அனைத்து கடற்றொழிலாளர் சங்கங்கள் உடனான விசேட சந்திப்பு இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம் பெற்றது குறித்த கூட்டத்தில் வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் இந்திய இழுவை மடி உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன் எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் முன் வைக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது

குறித்த கூட்டத்தில் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

நீண்ட காலமாக வடக்கு மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினால் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

எனினும் கடந்த காலங்களில் அந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காவிட்டாலும் தற்போதுள்ள அரசாங்கத்தினால் ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி குறித்த இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம்.

அதற்கு அனைத்து மீனவர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் குறித்த பேச்சுவார்த்தையின்போது தெரிவிக்க உள்ள விடயங்கள் தொடர்பில் இன்றைய தினம் மீனவர்களுடன் தான் கலந்துரையாடி உள்ளதாகவும் அதன் மூலம் தெரிவிக்கப் பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் அறிந்து கொண்டதாகவும் இதன்போது அமைச்சர் குறிப்பிட்டார்..

எனவே எதிர்வரும் தினங்களில் குறித்த பேச்சுவார்த்தையின் மூலம் மீனவர்களின் அத்துமீறிய வருகைக்கு ஒரு தகுந்த முடிவு கிடைக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

Leave A Reply

Your email address will not be published.