வவுனியாவில் முறையான சீரமைப்பு இன்றி கழிவுநீர் வயல்களுக்கு செல்கின்றது

0 54

வவுனியா பட்டாணிச்சூர் இரண்டாம் ஒழுங்கை வீதியில் முறையான கால்வாய் அமைப்புக்கள் சீராக இன்றி கழிவுநீர் வீதிகளில் தேங்கி நிற்பதாகவும் இதனால் மழை காலத்தில் டெங்கு நுளம்பு பெருக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனை சீரமைத்துத்தருமாறு அப்பகுதி மக்கள் கோரி வருகின்றனர்

இது குறித்து மேலும் தெரிவிக்கையில் ,

வவுனியா பட்டாணிச்சூர் இரண்டாம் ஒழுங்கையிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்கு அருகிலிருந்து வெளியேறும் கழிவுநீர் முறையான கால்வாய்கள் சீரமைப்புக்கள் இன்றி வீதிகளில் தேங்கி நிற்பதால் மழை காலத்தில் டெங்கு நுளம்புகள் பெருக்கம் அதிகரித்துக்காணப்படுகின்றது.

இவ்வாறு தேங்கி நிற்கும் கழிவுநீர் முறையான சீரமைப்புக்கள் இன்மையால் வயல் நிலங்களுக்குள் செல்கின்றது .

எனவே இதனால் வயல் நிலங்களில் சுகாதர சீர்கேடுகள் இடம்பெற்று வருகின்றன . இதனைக்கட்டுப்படுத்த உரிய அமைப்புக்கள் , அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு மேலும் தெரிவித்துள்ளனர் .

Leave A Reply

Your email address will not be published.