புதியவகை வைரஸ் மூலம் இலங்கையை மிரட்டுகிறது பிரித்தானியா..

0 169

பிரித்தானியாவில் பரவி வரும் புதியவகை கோவிட் வைரஸ் இலங்கையில் பரவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் பெரிய அதிகரிப்பு ஏற்படும் என தொற்று நோயியல் தலைமை நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த வைரஸ் ஏற்கனவே பரவியுள்ள வைரஸை விட 70 சதவீதம் வேகமாக பரவி வருவதாக குறித்த மருத்துவ நிபுணர் தெரிவிக்கின்றார்.

இதனால் பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்குள் நுழையும் பயணிகள் மூலம் குறித்த வைரஸ் நாட்டிற்குள் ஊடுருவினால் கோவிட்டின் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

எனவே, புதிய வகை வைரஸ் நாட்டிற்குள் வராமல் தடுக்க கூடுதல் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.