மனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஆராயவுள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி..

0 265

மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரான திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதியால் அதிசிறப்பு வர்த்தமானிமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அண்மையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டது.

இந்த குழுவில் உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் சந்திர பெர்ணாந்து மற்றும் ஓய்வுபெற்ற மாவட்டச் செயலாளர் நிமல் அபேசிறி ஆகிய மூவர் இடம்பெற்றிருந்தனர்.

இந்த நிலையில் அந்த ஆணைக்குழுவில் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரான திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவும் உள்வாங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பன்மைத்துவம் மற்றும் பாலின அடையாளத்தை பிரதிபலிக்க வேண்டியதனை கவனத்தில் கொண்டு இந்த நியமனம் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.