சிங்களத்தில் வாக்குமூலம் வழங்க முடியாது – திணறிய பொலிஸார் – சாணக்கியனிடம் விசாரணை.

0 101

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் யாழ் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி. மணிவண்ணன் ஆகியோரிடம் இன்று பிற்பகல் வாக்குமூலம் பெறப்படுகிறது.

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், மணிவண்ணனிடம் மன்னார் மற்றும் பருத்தித்துறை பொலிஸார் மாநகர சபை முதல்வர் அலுவலகத்துக்குச் சென்று வாக்குமூலம் பெறுகின்றனர்.

சிங்களமொழியில் வாக்குமூலத்தை பதிவு செய்ய பொலிஸார் முயற்சித்த போதும் அதற்கு மறுப்புத் தெரிவித்த யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், வி.மணிவண்ணன், தான் தெரியாதமொழியில் எழுதப்பட்ட வாக்குமூலத்தில் கையொப்பமிடமீட்டேன் என உறுதியாகக்கூறினார்.

அதேவேளை, மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடமும் இன்று பிற்பகல் மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்துக்குச் சென்ற பல பொலிஸ் நிலைய பொலிஸார் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.