P2P போராட்டம் – கூட்டமைப்பு எம்.பி களிடம் தொடர் விசாரணை.

0 112

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டமை குறித்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்து.

மன்னார் பொலிஸாரினால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது..

இலங்கை தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் வைத்து இந்த வாக்குமூலம் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்று அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனிடம் இன்று காலை திருக்கோவில், மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையங்களின் பொலிசார் சுமார் 3 மணிநேர விசாரணை மேற்கொண்டு வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.