அமெரிக்க வங்கியை ஊடுருவி 17.2 மில்லியன் ரூபா பணத்தினை திருடிய வவுனியா இளைஞன்..

0 473

பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வவுனியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வவுனியா வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் வங்கிக் கணக்குகளை ஊடுருவி சுமார் 17.2 மில்லியன் ரூபா பணத்தினை தனது வங்கிக் கணக்குக்கு மாற்றியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இருந்தே குறித்த இளைஞன் இவ்வாறு தனது வங்கி கணக்குக்கு பணத்தினை மாற்றியுள்ளதாகவும் தெர்pவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.