உங்களுக்கு இந்த அறிகுறி இருந்தால் நீரிழிவு நோய் தீவிரமடைந்து விட்டதாம்!

0 53

இன்றைய காலத்தில் வயது வரம்பின்றி அனைவரும் தாக்கும் உயிர் கொல்லி நோய்களுக்குள் புற்றுநோய்க்கு அடுத்தப்படியாக நீரிழிவு நோய் உள்ளது.

கணையத்திலுள்ள பீட்டா செல்களில் சுரக்கும் இன்சுலின் எனும் ஹாா்மோன் சுரக்க முடியாமல் போவதாலும், சுரப்பு பற்றாக்குறையாலும் ரத்தத்தில் சா்க்கரையின் அளவு கூடுகிறது. இந்த நிலை நீரிழிவு நோய் என்று அழைக்கப்படுகின்றது.

நீரிழிவு நோய் வருவதற்கு நிறைய காரணங்கள் உண்டு. பரம்பரை, வாழ்க்கை முறை, உணவு முறை போன்றவை முக்கிய காரணமாக திகழ்கின்றது. இதனை ஆரம்பத்திலே கட்டுப்படுத்தி விட வேண்டும்.

ஏனெனில் இது தீவிரமான பல உடல்நல கோளாறுகளை ஏற்படுத்திவிடுகின்றது. அதிலும் நீரிழிவு நோய் தீவிரமாகிவிட்டால் ஒரு சில அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ளலாம்.

அந்தவகையில் நீரிழிவு நோய் தீவிரமாகிவிட்டால் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்படும் என்பதை பற்றி பார்போம்.

  • மஞ்சள், சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் பார்ப்பதற்கு பருக்கள் போன்று காணப்படும். இது இரத்தம் உறைந்த நிலையில் சிறு கட்டியாக இருக்கும். வலி , அரிப்பு இருக்கலாம். இப்படி அதிகம் வந்தால் உடனே இரத்த சர்க்கரை அளவை கண்காணிப்பது நல்லது.
  • அடர் நிறத்தில் தழும்புகள் போல் ஆங்காங்கே வரும். இது கழுத்து, கை , முதுகு போன்ற இடங்களில் வரலாம். அதிக இன்சுலின் சுரப்பை எச்சரிக்கும். இதுவும் ஒரு அறிகுறிதான்.
  • நீர் கோர்த்துக்கொண்டு கொப்புளங்கள் ஆங்காங்கே உருவாகும். இது பெரிதாகவும் , 3, 4 என ஒரே இடத்தில் குழுவாகவும் தோன்றும். பொதுவாக கை, கால், பாதம் , தோள்பட்டை போன்ற இடங்களில் உருவாகலாம். அது உடைந்தால் கடுமையான எரிச்சலை உண்டாக்கும். இப்படி உணர்ந்தால் உடனே இரத்ததை பரிசோதித்து சர்க்கரை அளவை உறுதி செய்துகொள்ளுங்கள்.
  • உடலில் காயங்கள் ஏற்பட்டால் அது பெரிதாகலாம். ஆற நீண்ட நாட்களாகலாம். போதுமான இரத்த ஓட்டம், சேதமடைந்த நரம்புகளால் காயங்கள் ஆறாமல் போகலாம்.
  • வறண்ட சருமம், நமைச்சல், அரிப்பு ஆகியவையும் சர்க்கரை நோய் அதிகரிப்பதன் அறிகுறியாகும்.
  • மஞ்சள் நிறத்தில் கண்களுக்குக் கீழே பொறிப்பொறியாக சிறு கட்டிகள் போன்று உருவாகும். இதுவும் கட்டுபாடற்ற சர்க்கரை நோயின் அறிகுறியாகும்.
Leave A Reply

Your email address will not be published.