நீதவானை வீடு புந்து தாக்கிய கொள்ளையர்கள்! தீவிர வேட்டையில் பொலிஸார்..

0 225

மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி ஒருவரின் வீட்டுக்குள் இன்று அதிகாலை 3 மணியளவில் திருடர்கள் புகுந்து தமது கைவரிசையை காட்டியுள்ளனர்.

அக்கரைப்பற்று வை.எம்.சி. வீதியில் உள்ள அவரின் வீட்டில் உறக்கத்தில் இருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நீதவான் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்களை பிடிக்க நீதவான் முற்பட்டுள்ளார்.

எனினும் நீதவானை தாக்கிவிட்டு அவரின் மனைவியின் தாலிக்கொடியை அறுத்துக் கொண்டு கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீதவான் கொள்ளையர்களை பிடிக்க முற்பட்டபோது அவரின் கைகளில் கூரிய ஆயுதத்தால் தாக்கிய கொள்ளையர்கள் 11 பவுண் தாலிக்கொடியுடன் தப்பி ஓடியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை இந்த பகுதியில் கடந்த வாரம் இரு வீடுகளில் புகுந்த கொள்ளையர்கள் உறக்கத்தில் இருந்த இரு பெண்களின் தாலிக்கொடிகளை கொள்ளையிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இதுவரை கொள்ளையர்கள் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.