வவுனியா கல்மடுவில் ஒருவருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

0 3,058

வவுனியா கல்மடு பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கல்மடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட ஈஸ்வரி புரத்தை சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் கொழும்பு கொட்டகெனவில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் குறித்த இளைஞன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி. ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கொரோன தொற்று உறுதி செய்யப்படாத நிலையில் வவுனியாவில் உள்ள அவரது வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இதனை அடுத்து கடந்த 22 ஆம் திகதி வவுனியா கல்மடு ஈஸ்வரி புரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற  இளைஞன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

இதன்படி கடந்த 2ம் திகதி மேற்கொள்ளப்பட்ட 2வது பரிசோதனையில் குறித்த இளைனனுக்கு கொரோன தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தொற்றுக்கு உள்ளான இளைஞன் நேற்று இரவு கிளிநொச்சி தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.