தேவகுளம் பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் நீரில் மூழ்கி ஒருவர் காணாமல் போயுள்ளார்.

0 975

வவுனியா சாஸ்திரிகூழாங்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட
தேவகுளம் பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் நீரில் மூழ்கி ஒருவர் காணாமல் போயுள்ளார்.

வவுனியா தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய தணியன் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

வவுனியாவில் ஏற்பட்டு வந்த வரட்சியினால் நீரின்றி காணப்பட்ட குறித்த நீர்த்தேக்கமானது புரேவி புயலினால்
நீர்மட்டம் அதிகரித்து நிரம்பி வழிந்து வருகின்றது.

இந்த நிலையில் வவுனியாவில் சுற்றுலாப் பயணிகளால் ஈர்க்கப்பட்ட குறித்த நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்காக
இழைஞர் தனது நண்பர்களுடன் இன்று நண்பகல் அங்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் நீர்வழிந்தேடும் சுருங்கைப் பகுதியில் இறங்கிய குறித்த இழைஞன் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து இழைஞரை தேடிய நண்பர்கள் கண்டுபிடிக்க முடியாதநிலையில் ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்;துக்கு விரைந்துத வந்த ஈச்சங்குளம் பொலிஸார் இழைஞனை தேடிவருவதுடன் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.